சர்வதேச தரத்தில் சென்னை ஏர்போர்ட்டில் 'பார்'
>> Tuesday, September 9, 2008
சர்வதேச தரத்தில் சென்னை ஏர்போர்ட்டில் 'பார்' , இது குறித்து அடிக்கடி விமான நிலையம் வரும் டிரைவர் ஒருவர் கூறுகையில், "இதில் சர்வதேச தரம் பார்க்கும் விமான நிலைய ஆணையம், மற்ற வசதிகளையும் சர்வதேச தரத்தில் வைத்திருக்கிறதா என்றால் இல்லை. நள்ளிரவில் வந்து பாருங்கள். வெளிநாடுகளில் இருந்து வரும் உறவினர்களை, நண்பர்களை வரவேற்க வருவோர் உட்கார இடமில்லாமல் பல மணி நேரம் நின்று கொண்டிருக்கிறார்கள். இதனால், பெண்கள், வயதானவர்கள் படும்பாடு கொஞ்ச, நஞ்சமல்ல. இவர்களுக்கு குடிநீர் வழங்கப்படுவதில்லை. தாகம் எடுத்தால் பணம் கொடுத்துதான் மினரல் வாட்டர் வாங்கி குடிக்க வேண்டும். குறைவான கழிப்பறைகளே உள்ளன. இதில் எல்லாம் சர்வதேச தரத்தை கடைப்பிடிக்கவில்லை. சாராயம் விற்பதில் மட்டும் சர்வதேச தரத்தை கடைப்பிடிக்கிறது நிர்வாகம்' என்றார்.
இது சத்தியமான உண்மை என்று அடிக்கடி விமானத்தில் போய் வரும் நமக்குதான் சென்னை விமானநிலையத்தின் சர்வதேசதரம் தெரியும்...சாம்பிளுக்கு சில
நாத்தமடிக்கும் கழிப்பறைகள்
சாப்பிட நல்ல ஹோட்டல் கிடையாது
வாசலில் நிற்க்கும்/வழியும் காக்கிசட்டை பிச்சைக்காரர்கள் (சார் நம்ம ஊர் காசு அங்கே போனா செல்லாது என்கிட்டை கொடுத்துட்டுபோங்கன்னு பில்டப்வேற.....???)
விமானநிலையத்த சுத்தமா சுகாதாரமா வச்சிக்குனும்னு சொரனையே இல்லாத ஏர்போர்ட் மேனேஜர்.
எவன் இளிச்சவாயன் வருவான் அவன்கிட்ட காச கறக்கும் கஸ்டம்ஸ் ஆபிஸர்ஸ் (ரூபா வேண்டாம் டாலரா கொடுங்கன்னு அன்பு கட்டளைவேற).
ஹைதராபாத், பங்களூரு விமானநிலையத்த பார்த்தும் இன்னும் சென்னை விமானநிலையத்த பத்தி கவலைபடாத நம்மஊரு அரசியல்வியாதிகளை நினைத்தால்...
நெஞ்சு போறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட...................
0 comments:
Post a Comment