ஸ்ஸ்ஸ் இப்பவே கண்ண கட்டுதே.........புதிய மத்திய அமைச்சர்கள் பட்டியல் வெளியீடு

>> Wednesday, May 27, 2009

புதிய மத்திய அமைச்சர்கள் பட்டியல் வெளியீடு

புதுதில்லி, மே 27: மத்திய அமைச்சரவையில் புதிதாக இடம்பெறுவோர் பட்டியலை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. இவர்கள் அனைவரையும் அமைச்சர்களாக்க குடியரசுத் தலைவருக்கு பிரதமர் பரிந்துரை செய்துள்ளார். அதன் விவரம்



கேபினட் அமைச்சர்கள்


1.தயாநிதி மாறன்

2.மு.க.அழகிரி

3.ஆ.ராசா

4.ஜி.கே.வாசன்

5.செல்ஜா

6.பவண் குமார் பன்சால்

7.மல்லிகார்ஜுன கார்கே

8.எம் எஸ் கில்

9.காந்திலால் பூரியா

10.விலாஸ் ராவ் தேஷ்முக்

11.முகுல் வாஸ்னிக்

12.பரூக் அப்துல்லா

13.வீரபத்ர சிங்

14.சுபோத் காந்த் சகாய்


இணையமைச்சர்கள் (தனிப் பொறுப்பு)


1.பிரஃபுல் படேல்
2.பிரித்விராஜ் சவாண்
3.ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்வால்
4.சல்மான குர்ஷித்
5.தின்ஷா படேல்
6.ஜெய்ராம் ரமேஷ்
7.கிருஷ்ணா தீரத்


இணையமைச்சர்கள்

1.இ. அகமது
2.வி. நாராயணசாமி
3.ஸ்ரீகாந்த் ஜேனா
4.முல்லபள்ளி ராமச்சந்திரன்
5.புரந்தேஸ்வரி
6.பனபாக லட்சுமி
7.அஜய் மக்கன
8.முனியப்பா
9.நமோ நாராயண் மீனா
10.ஜோதிராதித்ய சிந்தியா
11.ஜிதின் பிரசாத்
12.ஜாய் பிரதாப்
13.குருதாஸ் காமத்
14.பல்லம் ராஜு
15.மகாதேவ் கண்டேலா
16.ஹரீஷ் ராவத்
17.கே.வி.தாமஸ்
18.சுகதா ராய்
19.சிசிர் அதிகாரி
20.தினேஷ் திரிவேதி
21.சுல்தான் அகமது
22.முகுல் ராய்
23.மோகன் ஜாதுவா
24.எஸ் எஸ் பழனிமாணிக்கம்
25.டி.நெப்போலியன்
26.எஸ். ஜெகத் ரட்சகன்
27.எஸ். காந்தி செல்வன்

28.புனீத் குமார்
29.சச்சின் பைலட்
30.சசி தரூர்
31.பரத்சிங் சோலங்கி
32.துஷார்பாய் செüத்ரி
33.அருண் யாதவ்
34.பிரதீக் பிரகாஷ் பாபு பாட்டீல்
35.ஆர் பி என் சிங்
36.வின்சென்ட் பாலா
37.பிரதீப் ஜெயின்
38.அகதா சங்மா

மத்திய அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் பிரதமர் மன்மோகன் சிங்கும் இன்று ஆலோசனை நடத்தினர். இந்தச் சந்திப்பின்போது அமைச்சரையில் இடம்பெறுவோர் பட்டியல் இறுதி செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

Read more...

திசை மாறிப் பறக்கிறது திமுகவின் தமிழ் இன உணர்வு!

>> Monday, May 25, 2009

மத்தியில் புதிய அமைச்சரவை அமையும்போதெல்லாம் இந்தியா முழுவதும் தமிழகத்தைக் கூர்ந்து பார்க்க நேர்வது வழக்கமாகிவிட்டது.

2004-ம் ஆண்டு, காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகித்த திமுக கேட்ட அமைச்சர் பதவிகள் ஒதுக்கப்படவில்லை என்பதில் கருத்துவேறுபாடு ஏற்பட்டு, முன்னதாகவே காங்கிரஸ் அளித்த உறுதிமொழிப் பத்திரத்தைக் காட்டி எல்லோரையும் பிரமிக்க வைத்தார் திமுக தலைவர் மு.கருணாநிதி.

இப்போதும் அதேபோன்று அமைச்சர் பதவி கேட்பதில் கருத்துவேறுபாடு கொண்டு, அதை ஒரு நாள் முழுவதும் ஊடகங்கள் பெரிதாகப் பேசிமுடித்த பிறகு, தில்லியை விட்டுப் புறப்பட்டு வந்துவிட்டார் தமிழக முதல்வர்.

பல்வேறு கட்சிகளும் நிபந்தனையற்ற ஆதரவை தாமாகவே அளித்துள்ள நிலையில், ஆட்சி நடத்தத் தேவையான எண்ணிக்கை பலம் காங்கிரஸிடம் இருக்கிறது. காங்கிரஸ் கட்சி கொடுப்பதை ஏற்றுக்கொள்வது அல்லது வெளியிலிருந்து ஆதரிப்பது என்பதைத் தவிர திமுகவுக்கு வேறு வழி கிடையாது. காங்கிரஸýடன் உறவை முறித்துக்கொண்டால் மத்திய அரசுக்கு எந்த இழப்பும் இல்லை. மாறாக, தமிழகத்தில் பெரும்பான்மை இல்லாத திமுக அரசுக்குத்தான் இழப்பு.

எண்ணிக்கை பலத்தால் மட்டுமே தற்போது திமுகவின் கோரிக்கையை காங்கிரஸ் மறுக்கிறது எனச் சொல்வதற்கில்லை. சென்ற ஆட்சிக் காலத்தில் கூட்டணிக் கட்சிகளால் காங்கிரஸ் கட்சி சந்திக்க நேர்ந்த தர்மசங்கடங்கள் ஏராளம். அதில் முக்கியமான இரண்டு நிகழ்வுகள் திமுக அமைச்சர்களால் நேர்ந்தவை.

முதலாவதாக, சேது சமுத்திரத் திட்டத்தில் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சரான டி.ஆர். பாலு காட்டிய அவசரம். இதனால் தமிழக அரசே ஒரு நாள் வேலைநிறுத்தம் அறிவித்து, அதை அடையாள உண்ணாவிரதமாக மாற்றியது. சேது சமுத்திரத் திட்டச் செலவும், அதன்பிறகு கிடைக்கும் குறைந்த வருவாயும், கால்வாயைத் தொடர்ந்து தூர்வாரும் பணிக்கான தொடர் செலவினமும், பவளப்பாறை அழிவு மற்றும் ராமர் பாலம் சிதைவு என எல்லா பிரச்னைகளும் சேர்ந்து கொண்டதால்தான் இத்திட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் கொஞ்சம் தாமதப்படுத்த நேர்ந்தது. ஆனால் மத்திய அரசை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியது திமுக. அடுத்தது ரூ. 60,000 கோடி "ஸ்பெக்ட்ரம்' முறைகேட்டில் அமைச்சர் ராசா மீதான புகார். ஆகவே, கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தகைய அமைச்சர் பதவி அளிக்கவேண்டும் என்பதில் காங்கிரஸ் அதிக கறாராக இருப்பதைக் குறையாகச் சொல்லமுடியாது.

கடந்தகாலங்களில் காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கைகளை வைத்துப் பார்க்கும்போது, திமுக கேட்பதைக் கொடுத்து சமாதானம் செய்துகொள்ளும் முடிவைத்தான் பிரதமர் மன்மோகன் சிங்கும் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியும் மேற்கொண்டுள்ளனர். ஆட்சியை அமைக்கும்போது நிலையற்ற தன்மையை விரும்பமாட்டார்கள். உத்தரப் பிரதேசம் போல தமிழ்நாட்டிலும் காங்கிரûஸ சுய பலத்துடன் வளர்க்கத் தமிழக காங்கிரஸôர் விரும்பினாலும் அவர்கள் தன்மானத்துடன் செயல்படுவதைக் காங்கிரஸ் தலைமை விரும்பாது.

தற்போது திமுக எத்தனை அமைச்சர் பதவிகளைக் கேட்டது, எத்தனை பெற்றது, அல்லது பெற்றுக்கொள்ள மறுத்தது என்பது முக்கியமே அல்ல. அதற்கான நேரம் இதுவா? என்பதுதான் முக்கியமான கேள்வி.

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் "மறைவு'க்குப் பின், ஈழத் தமிழர்கள் 2.8 லட்சம் பேர் கதியற்று, காப்பான் இன்றி, கவலையிலும் பீதியிலும் பட்டினியாலும் நொந்து கிடக்கும்போது, அவர்களது வாழ்வு மற்றும் பாதுகாப்புக்குத் தமிழர் குழுக்களை அனுப்ப வேண்டிய அவசியம் இருக்கும்போது, அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளை அனுப்பி தமிழர்கள் கெüரவமாக நடத்தப்படுகிறார்களா; நிவாரணம் முழுவதுமாக கிடைக்கிறதா என்று கண்காணிப்புக் குழுக்களை இலங்கைக்கு அனுப்ப வேண்டிய தமிழக முதல்வர், தில்லியில் அமைச்சர் பதவிக்காக பேரம் பேசிக் கொண்டிருந்தால்.... இது தகுமோ, இது முறையோ, இது தருமம் தானோ!

உலக நாடுகளும், ஐ.நா. சபையும் தமிழருக்கு உதவிட ராணுவத்தின் கட்டுப்பாடு பெரும் தடையாக இருக்கிறது என்றும், கட்டுப்பாடுகளை நீக்கினால்தான் மறுவாழ்வுப் பணிகளைத் தொடங்க முடியும், உதவிகள் வழங்க முடியும் என்றும் வலியுறுத்திக் கொண்டிருக்கையில், தமிழக அரசின் செயல்பாடு என்ன?

ரோம் நகரம் பற்றி எரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தான் என்று ஒரு சொல்லடை உண்டு. தென்னிலங்கையில் தமிழினம் அழிந்து கொண்டிருக்க, தில்லியில் பதவி பேரம் பேசினார் ஒரு தமிழினத் தலைவர் என்ற பேச்சு வரலாற்றில் இடம்பெறுவது சரியா?

இன்னின்ன அமைச்சர் பதவி வேண்டும் என்று குறிப்பிட்டுக் கேட்கும் திமுக தலைவர் கருணாநிதி, சூழ்நிலை அவசியம் கருதி, ஈழத் தமிழர் நலன் மற்றும் நிவாரணப் பணிகளைக் கண்காணிக்கவும் அங்கே அரசியல் தீர்வும் அதிகாரப் பகிர்வும் நியாயமாகவும் முறையாகவும் நடைபெறவும் ஒரு அமைச்சர் பதவியை திமுகவுக்கு ஒதுக்கக் கோரியிருந்தாலும்கூட, அதற்காக அவரைப் பாராட்டலாம். ஆனால் நிலைமை அதுவாக இல்லை.

திமுக தலைவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகவும், இப்பிரச்னைக்குத் தீர்வு காண அவர் வந்தால் மகிழ்ச்சியுடன் வரவேற்பேன் என்றும் இலங்கை அதிபர் ராஜபட்ச முன்பு சொன்னதனால், இப்போது தமிழக முதல்வர் கருணாநிதி பயணப்பட்டிருக்க வேண்டிய இடம் கொழும்புதானே தவிர, தில்லி அல்ல.

திசை மாறிப் பறக்கிறது திமுகவின் தமிழ் இன உணர்வு!

Read more...

நூறு விதமான ஸ்டைலில் ரஜினி பாட்டு!

>> Sunday, May 24, 2009

நூறு விதமான ஸ்டைலில் ரஜினி பாட்டு!

"சிவாஜி' படத்தில் எம்.ஜி.ஆர்., சிவாஜி, கமல், ஜேம்ஸ் பாண்ட் என
பலரது, "கெட்டப்'பில் தோன்றி நடித்த ரஜினி, "எந்திரன்' படத்தில்
ஒரே பாடலில் 100 விதமான காஸ்ட்டியூம்களில், 100 விதமான ஸ்டைல்
காட்டி நடித்துள்ளார். அதைப் பார்த்து, "உலகிலேயே ஒரே பாடலில்
இத்தனை விதமான ஸ்டைலை ரஜினியைத் தவிர யாராலும் வெளிப்படுத்த
முடியாது...' என்று அப்பாடலுக்கு நடனம் அமைத்த பிரபுதேவா
மிரட்சியுடன் சொல்லி வருகிறார்.


—சினிமா பொன்னையா


* * *


அமீர்கானை அசத்திய அஜீத்குமார்!


"கஜினி'யைத் தொடர்ந்து தமிழில் மீண்டும் ஒரு நல்ல கதை கிடைக்காதா
என்ற தேடலில் இறங்கிய அமீர்கானின் கண்ணில் அஜீத்தின், "வரலாறு'
படம் தென்பட, அதில் அஜீத்தின் நடிப்பை பார்த்து அசந்து போனார்.
உடனே, அஜீத்தை தொடர்பு கொண்டு பாராட்டிய அமீர்கான், அடுத்து,
"வரலாறு' படத்தின் இந்தி ரீ-மேக்கில் நடிக்க தயாராகி வருகிறார்.


* * *


வித்தியாசமானபிரபுதேவா!


சிறிய இடைவேளைக்குப் பிறகு, "களவாடிய பொழுதுகள்' படம் மூலம்
மீண்டும் ஹீரோவாக நடிக்கும் பிரபுதேவா, படத்தின் கதையை ஆகா,
ஓஹோவென்று புகழ்கிறார். குறிப்பாக, "இப்படியொரு கதைக்காகத்தான்
இத்தனை காலம் காத்திருந்தேன். அப்படியொரு காதல், பாசம் கலந்த
உணர்வுகளின் தொகுப்பு இந்தப் படம். இதில் வித்தியாசமான
பிரபுதேவாவை பார்க்கலாம்...' என்கிறார். இதில், நடிப்பதற்காக
தெலுங்கில் சித்தார்த்தை கொண்டு இயக்கும் படத்தின் படப்பிடிப்பை
கூட தள்ளி வைத்துள்ளார்.


* * *


ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் டி.எம்.எஸ்.,!


எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில், "கிருஷ்ண விஜயம்' படத்தில், "ராதே
உனக்கு கோபம் ஆகாதடி...' என்ற பாடல் மூலம் சினிமாவுக்கு
அறிமுகமானவர் பாடகர் டி.எம்.சவுந்தர்ராஜன். தற்போது, அவர்
மீண்டும் அதே எம்.எஸ்.வி., இசையில், "வாலிபன் சுற்றும் உலகம்'
படத்தில் பி.சுசீலாவுடன் இணைந்து பாடியுள்ளார். இந்நிலையில் தான்
இசையமைக்கும் ஆல்பத்தில் பாடவும் டி.எம். சவுந்தர்ராஜனுக்கு
அழைப்பு விடுத்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.


—சி.பொ.,


* * *


த்ரிஷா உஷார் நடவடிக்கை!


கோடிக் கணக்கில் சம்பளம் கேட்டு நயன்தாரா, இலியானா என்று சில
நடிகைகள் படாதிபதிகளின் அதிருப்திக்கு ஆளாகியுள்ளதால், உஷாராகி
விட்டார் த்ரிஷா. "என் நடிப்புக்கு என்ன ஊதியமோ, அதை
தயாரிப்பாளர்கள் நான் கேட்காமலேயே தருவர். சிலர் பணம் தான்
முக்கியம் என்று அலையலாம்; ஆனால், நான் அப்படியல்ல. எனக்கு
கேரக்டர் தான் முக்கியம்; பணமெல்லாம் அதற்கு பிறகு தான்!' என்று
அறிக்கை வெளியிட்டு நல்ல பெயரை சம்பாதித்து வருகிறார் த்ரிஷா.
அவளுக்கு எவள் ஈடு; அவளுக்கு அவளே ஜோடு!


— எலீசா.


* * *


கவர்ச்சிக்கு முழுக்குப் போட்ட மும்தாஜ்!


"ராஜாதி ராஜா' படத்தில், "சைதை சைலஜா' என்ற வில்லி ரோலில்
நடிக்கும் மும்தாஜ், ஒரு கட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சராகி
விடுகிறார். அந்த பாத்திரத்தில், "பஞ்ச்' டயலாக் விட்டபடி
மும்தாஜ் நடித்த நடிப்பைப் பார்த்தவர்கள், "அடுத்து வில்லியாக
பெரிய ரவுண்டு வருவீர்கள்...' என்று அடித்து சொல்கின்றனர்.
அதனால், இனி கவர்ச்சிக்கு முழுக்கு போடப் போவதாக சொல்லும் மும்
தாஜ், முழுநேர வில்லி அவதாரம் எடுக்க தீர்மானித்துள்ளார்.


* * *


கலக்க வருகிறார் சரோஜா தேவி!


ஜக்குபாயைத் தொடர்ந்து, "ஆதவன்' படத்தை இயக்கும் கே.எஸ்.
ரவிக்குமார், மாஜி கதாநாயகி சரோஜாதேவிக்கு முக்கியத்துவம்
கொடுத்துள்ளார். அவரை மேலும் பெருமைப்படுத்தும் வகையில்
எம்.ஜி.ஆர்., சரோஜாதேவியின் சூப்பர்ஹிட் டூயட் பாடல் ஒன்றையும்
மலரும் நினைவுகளாக படத்தில் இணைக்கவும் திட்டமிட்டுள்ளார்.
இதனால், படப்பிடிப்புக்கு தன்னை எப்போது அழைப்பர் என்று ஏக
குஷியில் உள்ளார் கன்னடத்துப் பைங்கிளி சரோஜா தேவி. ஆடிய காலும்,
பாடிய வாயும் சும்மா இருக்காது.


* * *


பப்ளிசிட்டி தேடும் ப்ரியாமணி!


இந்தி, "ராவணா'வில் சூர்ப்பனகை வேடத்தில் நடிக்கும் ப்ரியாமணி,
படம் ரிலீசானதும் இந்தி சினிமாவுக்குள் நுழைய அதிரடி திட்டம்
தீட்டி வருகிறார். "ராவணா' வில் தன் பங்கு சிறியதே என்றபோதும்,
"தென்னக சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகைகளுள் நானும் ஒருவள்!'
என்பதை அங்குள்ள பிரபலங்களுக்கு உணர்த்தும் வகையில் தன் படப்
பட்டியலையும், தான் தேசிய விருது பெற்ற நடிகை என்பதையும்,
வெளிப்படுத்தி வருகிறார். காரண குருவே காரிய குரு.

Read more...

நம்பினார் கெடுவதில்லை!

களங்கமற்ற, முழுமையான இறை நம்பிக்கை, இறைவனை நம்மிடம் நேரில்
கொண்டு வந்து காட்டும் என் பதற்கு உதாரணமாக திகழ்ந்தவர்
நம்பியாண்டார் நம்பி.


இவர், சோழ நாட்டில் தில்லையம்பலமான சிதம்பரம் அருகிலுள்ள
திருநாரையூரில் அவதரித்தார். இங்குள்ள பொள்ளாப்பிள்ளையார் கோவில்
மிகவும் பிரபலமானது. "பொள்ளா' என்றால், உளியால் செதுக்கப்படாதது
என்று பொருள்; அதாவது, தானாகவே தோன்றிய சுயம்பு விநாயகர் அவர்.


இந்த விநாயகருக்கு பூஜை செய்து வந்தார் நம்பியின் தந்தை;
நம்பிக்கும் பூஜை முறைகளைக் கற்றுக் கொடுத் தார். ஒருநாள், அவர்
தன் மனைவியுடன் வெளியூர் செல்ல இருந்ததால், மகனிடம், "இன்று, நீ
போய் விநாயகருக்கு நைவேத்யம் செய்து பூஜை செய்து வா...' என்றார்.


மகிழ்ச்சியடைந்த சிறுவன் நைவேத்திய பொருட்களுடன் கோவிலுக்குச்
சென்றான். விநாயகரை வணங்கி நைவேத்யத் தைப் படைத்தான்.


"அப்பனே, விநாயகா! நான் சின்னஞ்சிறுவன். அப்பா ஊருக் குப் போய்
விட்டார். உனக்கு தேங்காய், பழம், பொங்கல் கொண்டு
வந்திருக்கிறேன். ஒன்று விடாமல் சாப்பிடு. குருகுலத்துக்கு
கிளம்ப வேண்டும். தாமதமாகச் சென்றால், ஆசிரியர் கோபிப்பார்.
விரைவில் சாப்பிடப்பா...' என்றான்.


பிள்ளையார் என்றாவது சாப்பிட்டதுண்டா?


அவர் கல்லாக அப்படியே உட்கார்ந்திருந்தார். பையனுக்கு அழுகை
வந்தது...


"இதோ பார்! நீ மட்டும் இப்போது சாப்பிடாவிட்டால் இந்தத் தூணில்
முட்டி மோதி இறப்பேன்...' என்று சொல்லியபடியே, தூணில் முட்டி
அழுதான்.


அவனது களங்கமற்ற பக்தி விநாயகரை ஈர்த்தது. அவர் சன்னதியில்
இருந்து எழுந்து வந்து, அவனைத் தடுத்து நிறுத்தினார்.
தும்பிக்கையால் நெற்றியில் வழிந்த ரத்தத்தைத் துடைக்க, காயம்பட்ட
வடுவே மறைந்து விட்டது. நம்பியின் விருப்பப்படியே அத்தனை
பொருட்களையும் ஒன்று விடாமல் சாப்பிட்டார்.


அவரிடம், "விநாயகா! எப் படியோ இன்று குருகுலம் செல்ல நேரமாகி
விட்டது. நான் அங்கு சென்றிருந்தால் அவர் என்ன கற்றுக்
கொடுத்திருப் பாரோ, அதை நீயே சொல்லிக் கொடேன்...' என்றார் நம்பி.


அவனுக்கு அனைத்து ஞானத் தையும் போதித்து, மறைந்து விட்டார்
விநாயகர்.


மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு வந்தான் நம்பி. பெற்றவர்கள் ஊர்
திரும்பியதும் நடந்ததையெல்லாம் சொன்னான். அவர் கள் அடைந்த
ஆனந்தத்துக்கு அளவே இல்லை. இந்த விஷயம் ராஜராஜசோழனுக்கு
எட்டியது. அவன் நம்பியாண்டார் நம்பியின் இல்லத்துக்கே
வந்துவிட்டான். விநாயகருக்கு நைவேத்யம் செய்து அவர்
சாப்பிடுவதைக் கண்ணார கண்டு களிக்க வேண்டும் என்றான்.


அதன்படியே, கோவிலுக்குச் சென்று விநாயகரை சாப்பிட வைத்தார்
நம்பி. மன்னனும், மக்களும் ஆச்சரியப் பட்டனர். அவரது மகிமையை
உணர்ந்த மன்னன், தில்லையம்பலத்தில் பூட்டிக் கிடக்கும் அறையில்
மூவர் பாடிய தேவாரமும், தொகையடியார்கள் வரலாறும் இருப்பதைச்
சொல்லி, அவற்றை வெளியே கொண்டு வர ஆவன செய்யும்படி கேட்டுக்
கொண்டான்.


அதன்படி, அவர்கள் அங்கு சென்று புற்று மண்டிக்கிடந்த அறையில்
இருந்து ஓலைச்சுவடிகளை எடுத்து வந்தனர். நம்பியாண்டர் நம்பி
அவற்றை 11 திருமுறைகளாகப் பிரித்தார். அவை இன்றும் நமக்கு
இசையின்பத்தை வழங்கிக் கொண்டிருக்கின்றன.


குழந்தை போல களங்கமற்ற உள்ளங்களுக்கு கடவுள் தெரிவான் என்பதை
நம்பியாண்டார் நம்பி வரலாறு உணர்த்துகிறது.

Read more...

பித்தன் என்பவன் யார்?

பரமேஸ்வரனுக்கு, "பித்தன்' என்ற ஒரு பெயருமுண்டு. இவருக்கு
பிடித்துள்ள பித்து என்ன? உயிர்களை தம் பக்தர்களாக ஆக்குவதில்
பெரும் பித்தனாக இருக்கிறார். இந்த பித்தானது கருணை வடிவாகி,
அருள் பெருகி, பல பக்தர்களை அவன்பால் பித்து பிடிக்கும்படி
செய்கிறது.


அதீதமான பற்றுதலை பித்து என்பர். பணம், பணம் என்று அலைபவர்களை,
"பணப்பித்து' என்கின்றனர். சிவனையே நினைத்து பக்தி
செய்பவர்களையும் பித்தன் என்பர்.


பகவானைப் புகழ்ந்து பாடி வழிபட்டால், அவனை சந்தோஷப்படுத்தினால்,
அவன் பல சம்பத்துக்களையும் அளித்து, சம்சார பந்தத்திலிருந்து
நம்மை விடுவிக்கிறான்; பக்தர்களை ரட்சிக்க வேண்டியதை தன்
பொறுப்பாகவே ஏற்றுக் கொள்கிறான். கஷ்டம், மரணம் என்பதெல்லாம்
சாதாரண மக்களுக்குத் தான். அதை கண்டு அவர்கள் பயப்படுவர்; ஆனால்,
அவைகளைக் கண்டு பக்தர்கள் பயப்படுவதில்லை. பக்தர்களுக்கு வளமையோ,
செழுமையோ எதுவும் தெரியாது; தெய்வத்தின் அருளே அவர்களது செல்வம்.


சிவனார் ஆலகால விஷம் உண்டார். எதற்காக? அந்த விஷம் வெளியில்
இருந்தால் உலகத்துக்கு ஆபத்து என்பதற்காக. இது அவரது
கருணையல்லவா! தெய்வத்தை வழிபட்டு, நெறியான வாழ்க்கை வாழ்ந்து,
கடவுள் வழிபாட்டில் தீவிரமாக இருப்பவர்களை எந்தவித துன்பமும்
பாதிப்பதில்லை.


பாண்டிய மன்னன், மாணிக்க வாசகரை பலவிதமாக துன்புறுத்தினான்.
ஆனால், அவர் கலங்கவில்லை. பகவானை நம்பினார். பிரகலாதனும் பலவித
துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டும் வருத்தப்படவே இல்லை. தெய்வீக
இன்பத்தில் திளைத்திருப்பவர்களுக்கு சரீர துன்பம் எதுவுமே
தெரியாது!


தபஸ்விகள் தவம் செய்யும்போது, ஈ, எறும்பு கடித்தாலும், அதை
அவர்கள் அறிய மாட்டார் கள். மனம் கடவுளிடம் இருக்கும்போது சரீர
இன்ப, துன்பங்கள் அவர்களது தியானத்தை கலைப்பதில்லை.


ஒரு தபஸ்வியின் கழுத்தில் ஒரு செத்த பாம்பை போட்டான் பரீட்சித்து
மன்னன். ஆனால், அந்த தபஸ்விக்கு அது தெரியவே இல்லை. அவர் மனம்
தவத்தில் ஈடுபட்டிருந்தது.


தன்னை மறந்து பகவானிடம் மனதை வைப்பவர்களுக்கு வெளியில் அல்லது
தன்னைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதே தெரியாது. ஒருவர்
வாசற்படியின் அருகில் திண்ணையில் உட்கார்ந்து ஜெபம் செய்து
கொண்டிருக்கிறார். அவருக்கு எதிரில் ஒரு மாடு போகிறது. ஆனால்,
அதோ, மாடு போகிறது என்ற எண்ணம் அவர் மனதில் தோன்றவில்லை.


ஒருவன் வந்து, "ஐயா! இந்த பக்கம் ஒரு மாடு போயிற்றா?' என்று
கேட்டான். அவர், "தெரியலையே! நான் கவனிக்கவில்லையே...' என்றார்.
இவரது கண் முன் ஒரு மாடு போயிருக்கிறது; ஆனால், விழித்திருந்தும்
அவர் அந்த மாட்டை கவனிக்கவில்லை; காரணம், அவரது மனம் முழுவதுமாக
பக்தியில் ஈடுபட்டிருந்தது.


மனம் எதில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறதோ, அப்போது மற்ற விஷயங்கள்
மனதில் படுவதில்லை. இப்படி மெய்மறந்து பக்தி செய்ய வேண்டும்!

Read more...

ஸீ ஆப் மேட்ரிமனி

"கடலுக்குக் கரிப்புத் தன்மை இருப்பது எதனால் தெரியுமா?' என்று
கேட்டார் குப்பண்ணா.

"சொன்னால் தானே தெரியும்!' என்றேன்.


"கடலுக்குள் வந்து சேரும் நதிகளும், ஓடைகளும் உப்புச் சத்தைப்
பாறைகளிலிருந்தும், பூமியின் மேல் பரப்பிலிருந்தும் சிறுகச்
சிறுக அடித்து வந்து கடலில் சேர்ப்பதால்தான், கடல் நீர் ஆவியாக
மாறி மீண்டும் மழையாகப் பொழிகிறது. உப்பு மட்டும் கடலிலேயே தங்கி
விடுகிறது!'


"கடலுக்கு நீல நிறம் கொடுப்பது வானம் தானே? வானம் நீலநிறமாக
இருப்பதால் தானே கடல் அதை பிரதிபலிக்கிறது...' என்றேன்.


"இல்லையில்லை... கடலுக்கு நீல நிறம் கொடுப்பது சூரியன்தான்.
உண்மையில் கடல் நீர் நிறமற்றது. சூரியனிலிருந்து வெளிப்படும் பல
நிற ஒளிக்கதிர்களுள், நீல நிறத்தை தவிர மற்ற அனைத்தையும் கடல்
கிரஹித்துக் கொள்கிறது. நீலநிறக் கதிர்கள்மட்டும் கட லால்
எதிரொளிக்கப்படுவ தால் அது நீலநிறமாகத் தோன்றுகிறது!'


"சந்திரனுக்கும், கடல் கொந் தளிப்புக்கும் கூட சம்பந்தம்
இருக்கிறதாமே?'


"ஆமாம்... முழு நிலவின் ஈர்ப்பு சக்தியால் கடல் நீர்
எழுச்சியடைந்து மேலெழும்புகிறது. அதே போல் உலகின் பூமிப்
பகுதியும் கொந்தளிக்கிறது. பூமியின் நிலப்பரப்பு சில சமயங்களில்
ஆறு அங்குலம் கூட எழுந்து மீண்டும் அடங்குகிறதாம். உலகப்பரப்பின்
70 சதவிகிதம் தண்ணீர் தான். ஆனால், இதில் ஒரு சதவிகிதம் தான்
குடிக்க லாயக்கானது.


"ஜெர்மனியில் உள்ள ஹெமல் ஸ்டார் பர் என்ற ஏரியின் மேல் பகுதி
நீர் இனிப்பாகவும், அடிப்பகுதி நீர் கசப்பாகவும் இருக்கும்.
அதனால், இதற்கு ஸீ ஆப் மேட்ரிமனி என்று பெயர். மேட்ரிமனி என்ற
ஆங்கில வார்த்தைக்கு, மண வாழ்க்கை என்று பொருள்...' என்றார்
குப்பண்ணா.

Read more...

ஸ்காண்டிநேவியன் கன்ட்ரீஸ்

நார்வே, ஸ்வீடன், பின்லாந்து ஆகிய நாடுகள் ஐரோப்பிய கண்டத்தில்
அடுத்தடுத்து உள்ள நாடுகள். இவற்றை, "ஸ்காண்டிநேவியன் கன்ட்ரீஸ்'
என்றும் அழைப்பர். இந்த நாடுகளில் குளிர்காலம் அதிகம்... குளிர்
என்றால் பனி பொழியும் குளிர். குளிர் நேரத்தில் வெளியே செல்ல
வேண்டுமென்றால், குறைந்த பட்சம் 12 கிலோ எடையுள்ள ஆடைகள் அணிந்து
தான் செல்ல முடியும். தமிழ்நாட்டை விட இரண்டரை மடங்கு
பரப்பளவுள்ள நார்வே நாட்டின் ஜனத் தொகை 4 கோடியே 50 லட்சம் தான்;
தமிழ்நாட்டின் ஜனத்தொகை 6 கோடியே 25 லட்சம். இந்த நாட்டின் தனி
நபர் சராசரி வருமானம் ஆண்டுக்கு 15 லட்சம்; நம்ம ஊர் சராசரி
வருமானம் தான் உங்களுக்குத் தெரியுமே!


இப்படி ஒரு செல்வம் கொழிக்கும் நாட்டில் அகதிகளாக தஞ்சம் புகுவது
மிக, மிக சுலபமாக இருந்தது. இதை நன்கு பயன்படுத்திக் கொண்டனர்
இலங்கைத் தமிழர்கள். இலங்கையில் பிரச்னைகள் ஆரம்பித்த பிறகு,
சாரி, சாரியாக இந்நாட்டில் தஞ்சம் புக ஆரம்பித்தனர்.


அகதிகளாக வரும் ஒவ்வொரு தனி நபருக்கும் உதவித் தொகையாக மாதம் 40
ஆயிரமும், குடியிருக்க வீடும் கொடுத்து விடும் அந்நாட்டு அரசு.
ஒரே ஒரு கண்டிஷன்... அந்நாட்டு மொழியை கண் டிப்பாக படிக்க
வேண்டும். இதற்காக பள்ளிகளுக்குச் சென்று ஒப்புக்கு படித்து
வருகின்றனர் இலங்கை தமிழர்கள். அந்த நாட்டில் வேலை கிடைத்து
சென்றார் அந்துமணி வாசகி ஒருவர். அவ்வப்போது ஈ-மெயில் அனுப்பிக்
கொண்டிருப்பார். வேலைக்குச் சென்ற ஆறாவது மாதத்தில்
திடுதிப்பென்று வேலையை விட்டு விட்டு தமிழகம் வந்து சேர்ந்து
விட்டார். என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சந்திக்க நேரம்
கேட்டார். சந்தித்தோம்!

"சார்... மாதம் ஒரு லட்சத்து 25 ஆயிரம் சம்பளம் கொடுத்தனர்...
இருந்தும் நம்ம ராமராஜன் பாடியது போல, "நம்மூரப் போலாகுமா?'
என்னால் அங்கே குப்பை கொட்ட முடியலே! குளிர்... குளிர்...
குளிர்தான்! அங்கே குடும்ப வாழ்க்கை என்ற, "கான்செப்டே' இல்லை.
கிழவன், கிழவி என தனித் தனியே வாழ்கின்றனர்.


"திருமணம் செய்து கொள் ளாமல் சில காலம் சேர்ந்து வாழ்ந்து
குழந்தைப் பெற்றுக் கொள்கின்றனர்; பின் பிரிந்து சென்று
விடுகின்றனர். குழந்தை கள் வளர்ந்த பிறகு யாருடன் வாழ்கிறதோ,
அவரைப் பிரிந்து சென்று விடுகின்றன. ஓரினச் சேர்க்கை மிக அதிகம்;
இதை அரசாங்கமே அங்கீகரித்துள்ளது.


"அதே போல ஊசி மூலம் ஏற்றிக் கொள்ளும் போதை பழக்கமும் அதிகம்.
இதில் கொடுமை என்னவென்றால் பலரும் ஒரே ஊசியைப் பயன்படுத்தி
எய்ட்ஸ் பரவி விடக் கூடாது என்பதால், நகரின் முக்கியப்
பகுதிகளில் வேன்களில் வந்து அரசே சிரஞ்சுகளை சப்ளை செய்வது தான்.


"அதைப்போல வயதுக்கு வந்த 15, 16 வயதுடைய சிறுவர்களோ, சிறுமியோ
மாலை நேரத்தில் வெளியே சென்றால், "காண்டம் இல்லாமல் செயல்பட
வேண்டாம்...' என மகனிடமும், "காண்டம் இல்லாமல் அனுமதிக்காதே...'
என மகளிடமும் தாயோ, தந்தையோ கூறி அனுப்பும் அவலம் நடக்கிறது.
"இங்கு குழந்தை பிறப்பு மிகக் குறைவு. குழந்தை பெற்றுக்
கொண்டால், அதை வளர்ப்பதற்கு அரசே பணம் தருகிறது. பிறப்பு விகிதம்
குறைவு என்பதால், இங்கு முதி யோர் எண்ணிக்கை மிக அதிகம்.
முதியோருக்கு, "சோஷியல் செக்யூரிட்டி' என்ற பெயரில் பென்ஷன் போல
ஒரு பெரிய தொகையை அரசாங்கமே கொடுக்கிறது. இது போக 58 வயதை
தாண்டியவர்கள் தமக்கு உதவியாளர் ஒருவரை பணியமர்த்திக் கொள்ளலாம்.
அவரது சம்பளத்தையும் அரசே கொடுத்து விடும்.


"இப்படி கிடைக்கும் பணத்தை செலவு செய்யத் தெரியாமல் சேர்த்து
வைத்து, நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மிகக் கொடுமையான குளிர்
மாதங்களில் தாய்லாந்து போன்ற ஆசிய நாடுகளுக்கு வந்து, அங்குள்ள
விலை மாதர்களிடம் கொட்டிக் கொடுத்து விட்டுச் செல்கின்றனர்.


"அரசின் மொத்த வருமானத்தில் 65 சதவீதத்திற்கும் மேல் இதுபோல
முதியவர்களுக்கும், அகதிகளுக்கும் செலவிட நேர்வதால், அகதிகளை
வெளியேற்றி பெரும் பணத்தை மிச்சம் பிடிக்க நார்வே அரசு
முயல்கிறது. இதற்காகவே இலங்கை அரசையும், புலிகளையும் பேச வைத்து
சமரச முயற்சியில் ஈடுபட்டது நார்வே அரசு.


"நார்வேயில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு இந்த சமரச உடன்பாட்டில்
சிறிதும் உடன்பாடில்லை. காரணம், சமரசம் ஏற்பட்டு விட்டால்,
மேற்கொண்டு அவர்கள் அகதிகள் ஸ்டேட்டஸில் தொடர்ந்து நார்வேயில்
வசிக்க முடியாது; அவர்களை அங்கிருந்து நார்வே அரசாங்கம்
வெளியேற்றி விடும்.


"இப்படிப்பட்ட இறுக்கமான சூழலில் சொந்த பந்தம், நண்பர்கள், நமது
உணவு, நமது சூழல் ஆகியவற்றை விட்டு வாழ எனக்குப்
பிடிக்கவில்லை... லட்சத்திற்கு மேல் சம்பளம் கிடைத்தும்...இதோ
நான் இன்று ஒரு அன்எம்ப்ளாய்ட் போஸ்ட் கிராஜுவேட். என் மதம்
சார்ந்த கல்லூரி ஒன்றில் வேலை கிடைக்கும் நம்பிக்கையுள்ளது...'
என்று முடித்தார்.

Read more...

About this Blog

Seguidores

    © படித்ததில் பிடித்தது உங்கள் பார்வைக்கு............ Friends Forever Template by Emporium Digital 2009

Back to TOP