ரேஷன் அரிசி கிலோ ஒரு ரூபாய், கலைஞர்
>> Sunday, August 31, 2008
ரேஷன் கடைகளில் அரிசி கிலோ இரண்டு ரூபாய்க்கு விற்ற போது எத்தனை டன் அரிசி வெளி மாநிலங்களுக்கு கடத்தப்பட்டது. இதனால் எத்தனை ஏழை எளிய மக்களுக்கு கிடைக்கவேண்டிய அரிசி கிடைக்காமல் போனது. அதே போல்தான் இப்பொழுதைய அறிவிப்பும். கிலோ ஒரு ரூபாய்க்கு அரிசி என்று அறிவித்துள்ளீர்கள் இதில் எத்தனை டன் அரிசி வெளி மாநிலங்களுக்கு கடத்தப்படப் போகிறது என்பதை பற்றியும் தங்களது கேள்வி பதில் அறிவிப்பு மூலம் நாட்டு மக்களுக்கு தெரியப் படுத்துவிட்டீர்கள் என்றால் மிகவும் நல்லதாக இருக்கும்.
எத்தனை அறிவிப்புகள் அதில் எத்தனை தில்லு முல்லுகள். என்ன கொடுமைடா இந்த தமிழக மக்களுக்கு. இவரது அறிவிப்புகளை பிற மாநிலங்களும் பின் பற்றுகின்றனவாம். இதை விட கொடுமை நாட்டு மக்களுக்கு வேற எதுவும் இருக்க முடியாது.
0 comments:
Post a Comment