சிரிப்பு மாமே சிரிப்பு (எஸ்.எம்.எஸ் ஜோக்ஸ்)

>> Friday, August 29, 2008

வண்டி பஞ்சரானா ஸ்டெப்னி
கைகொடுக்கும். ஆனா,
மனுஷனுக்கு ஸ்டெப்னி
இருந்தா வாழ்க்கையே
பஞ்சராயிடும்.
இதான் மாமே உலகம்! Jஒ
கு.வைரச்சந்திரன், திருச்சி.

முருகனுக்கு மயில்
ஐயப்பனுக்கு புலி
சிவனுக்குக் காளை
கணபதிக்கு மூஞ்சுறு
எனக்கு சுஸ§கி
உனக்கு டாங்க்கி
சரிதான மாப்ள?
மகா, திருப்பூர்.

கூட்டம் கூட்டமாய் பறவைகளும்
சாரை சாரையாய் எறும்புகளும்
மந்தை மந்தையாய் மாடுகளும்
போற மாலை நேரத்துல
ஒளிஞ்சு ஒளிஞ்சு போறியடா
ஒயின் ஷாப்புக்குள்ளே...
எம்.கல்லூரி ராமன், கரிசல்புளி.

தமிழ்நாட்டுல மொத்தம்
12 பெரிய ஆறு,
187 சின்ன ஆறு,
3,200 வாய்க்கால்,
658 ஏரி,
13,562 குளம்,
1,55,800 கிணறு இருக்கு.
இவ்வளவு இருந்தும்
நீ ஏண்டா குளிக்கமாட்டேங்கற?
பா।திருச்செந்தாழை, மதுரை1.

அழகில் Ôமன்மதன்Õ நீ!
இரக்கம் Ôநெறஞ்ச மனசுÕ உனக்கு!
நீ யாருக்கும் அஞ்சாத Ôசத்ரபதி!Õ
உனது Ôட்ரீம்ஸ்Õ ஆச்சரியமானவை!
ஆனாலும் நண்பர்களிடமே
நீ Ôஅட்டகாசம்Õ பண்ணுவதைக்
குறைக்காவிட்டால் அப்புறம்
Ôஅந்நியன்Õ ஆகிவிடுவாய்!
எம்.ஏ.ஜின்னா, புதுக்கோட்டை.

அன்பே, என் வீட்டின் பின் வாசல்
உனக்காக எப்போதும் திறந்திருக்கும்.
அப்படித்தான் வருமாம் மூதேவி.
& ஸ்ரீ, சென்னை94.

ÔÔடேய் செல்லம்...
நம்முடைய முதல் சந்திப்பு
உனக்கு நினைவிருக்கிறதா...
திடீரென்று டிரெயின் நிற்க...
சொர்க்கம் போல ஜன்னல்கள் திறந்தன.
நம் விழிகள் சேர்ந்தன.
என்னை ஊடுருவிப் பார்த்தபடி
நீ பேசத் தொடங்கினாய்,
Ôவடா... தோசா... காபி... சாய்... சாய்...ÕÕÕ
ஷபீனாபானு, காஸியாபாத்.

எழுத்துல நீ டாக்டரோட பிரிஸ்கிரிப்ஷன்...
பேச்சுல நீ மணிரத்னம் பட வசனம்...
ஒவியத்துல நீ மாடர்ன் ஆர்ட்...
சுருக்கமா சொல்லணும்னா,
நீ ஒரு புரியாத புதிர்டா மாப்ள.ÕÕ
எஸ்.சுந்தரம், குமாரபாளையம்.

கனிக்கும் காய்க்கும்
இடையில் உள்ளது ருசிக்கிறது.
மொட்டுக்கும் சருகுக்கும்
இடையில் உள்ளது மணக்கிறது.
வெள்ளிக்கும் ஞாயிறுக்கும்
இடையில் இருப்பது எஸ்.எம்.எஸ். படிக்கிறது.ÕÕ
தாமு,தஞ்சாவூர்.

நேத்து எனக்கு நீ போன் பண்ணினப்ப...
நீங்கள் தொடர்புகொண்ட வாடிக்கையாளர்
தற்சமயம் பிஸியாக இருக்கிறார்Õனு
ஒரு ஆம்பளை வாய்ஸ் வந்திருக்குமே...
முட்டாளே, அப்படிப்
பேசினதே நான்தாண்டா!ÕÕ
ராகவ். மகேஷ், தஞ்சாவூர்.

வைரப்பொடியால் கோலம் இடுவேன்।
வான வில்லால் தோரணம் கட்டுவேன்.
மின்னல் கீற்றால் பந்தல் அமைப்பேன்.
விண்மீன் பறித்து வீதியில் தெளிப்பேன்.
ஒரு முறை... ஒரே முறை...
ஓட்டல் டீக்கு நீ காசு கொடுத்தால்!ÕÕ
தாமு,தஞ்சாவூர்.

என்ன மாமூ,பாதி தலை வழுக்கை
ஆயிடுச்சுனு வருத்தப்பட்டியாமே!
மண்ணுல செடிதான் முளைக்கும்.
உனக்கு முடிமுளைச்சிருக்கேனு
நாங்க ஆச்சரியப் பட்டுக்கிட்டிருக்கோம்.
நீ வருத்தப்படுறியே நியாயமா?!ÕÕ
மகேஷ்ப்ரியன், தாரமங்கலம்.

யானைக்கு தும்பிக்கை...
மாட்டுக்கு கொம்பு...
கழுதைக்கு கால்...
உனக்கு சாக்ஸ்!எதிரி எவன்
உன் முன்னாடி வருவான்சொல்லு,
மச்சி..!”
அ.சுகுமார், காட்டுக்கானூர்.

மச்சான் நல்லா படி।
நல்ல வேலையில சீக்கிரம் சேர்.
இல்லேன்னா... இப்படித்தான் வெட்டியா
வர்ற எஸ்.எம்.எஸ்&ஸ எல்லாம்
படிச்சிட்டிருப்ப.ÕÕ
ஆ.பிரபு, கோவில்பட்டி.

மச்சி... நீ எப்ப பார்த்தாலும்
சிக்னல் கிடைக்கலை சிக்னல்
கிடைக்கலைனு சொல்றியே அதெல்லாம்
செல்லுக்கு ஒழுங்கா பில் கட்றவனுக்குத்
தாண்டா கிடைக்கும்?ÕÕ
ஷக்திஷரவணன், அறந்தாங்கி.

மச்சான்! நீ எனக்கு
போன் பண்ணினா,
என் செல்போன்ல
என்ன ரிங்டோன்
வரும் தெரியுமா?
Ôநான் ஒரு
முட்டாளுங்க...ÕÕÕ
ராகவ்.மகேஷ், தஞ்சாவூர்.9

உண்மையிலே
நீ தியாகிதாண்டா
பங்காளி...
உன் லவ்வர்
Ôதம்Õமையும்
தண்ணியையும்
விடச் சொன்னதும் விட்டுட்டியாமே...
அவளை!ÕÕ
எம்.ஏ.ஜின்னா, புதுக்கோட்டை.

கோயிலுக்குப் போகாம
மொட்டை அடிச்சுக்கிட்டே!
முடி கொட்டாமலே
விக் வாங்கி வெச்சுக்கிட்டே!
மீசையோட சில நாள்!
மீசை இல்லாம சில நாள்!
கடன் வாங்கிட்டு இப்படியெல்லாம்
கஷ்டப்படணுமா மச்சி!ÕÕ
நிர்மலா, சென்னை33.

நீ 100 வயது வாழ
ஆசைப்பட்டால், நான்
அதைவிட ஒரே ஒரு
நாள் குறைவாக வாழ
ஆசைப்படுகிறேன்.
ஏனென்றால் நீ
இல்லாமல் என்னால்
ஒரு நாள்கூட
வாழ முடியாது.ÕÕ
வள்ளி, சென்னை

நண்பா! நேத்து நீ குடிச்சிட்டு கார்
ஓட்டினியாமே! இனிமேல் அந்த மாதிரி
செய்யாதே! ஏன்னா நீ குடிச்சா
எல்லாத்தையும் மறந்து போற!
நீ இன்னும் டிரைவிங்கே கத்துக்கலை
அப்படிங்கறதையும்கூட!ÕÕ
எம்.கோபாலகிருஷ்ணன், களர்காடு.

ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே...’’ இது சேரனின் ஆட்டோகிராஃப்
’‘தஞ்சை பெரிய கோயில்...‘‘ இது சோழனின் ஆட்டோகிராஃப்
‘‘மதுரை மீனாட்சியம்மன் கோயில்...‘‘ இது பாண்டியனின் ஆட்டோகிராஃப்
‘‘மகாபலிபுர சிற்பங்கள்...‘‘ இது பல்லவனின் ஆட்டோகிராஃப்
உன்னோட ஆட்டோகிராஃப்..? உனக்கேது ஆட்டோகிராஃப்..?
நீதான் கைநாட்டாச்சே!
ராகவ், தஞ்சாவூர்&9.

‘‘பிரியாவிடை கொடுத்துவிட்டு பைக்கில் புறப்பட்டுச் சென்றாயே! நீ சென்று வெகுநேரம் ஆகியும் அதே இடத்தில் கண்ணீர் மல்க நின்றிருந்தேன். பாவி, இப்படியா புழுதியை கிளப்பிவிட்டுப் போவது?ÕÕ
சிக்ஸ்முகம், ஈரோடு।

‘‘ஆடினாதான் மயிலு பாடினாதான் குயிலு ஓடினாதான் ரயிலு சூப்பர் ஸ்டார்னா ஸ்டைலு உள்ளே போனா ஜெயிலு வெளிய வர பெயிலு எஸ்।எம்।எஸ். அனுப்பினா தாண்டா மொபைலு!ÕÕ
டிஷ்னி, தேனி।

‘‘டேய்॥! புதுசா Ôடூத் பிரஷ்Õ வாங்கியிருக்கியாமே, கங்கிராட்ஸ்! இனி, திருப்புகழ் பாடாமலேயே உன் வாய் மணக்கப் போகுதுடா..!ÕÕ
டி।பசுபதி, ஊஞ்சவேலாம்பட்டி.

‘‘எல்லாத் தோட்டத்துக்கும் நீ ஒரு ரோஜாவாக இரு..! எல்லா முகத்துக்கும் நீ ஒரு சிரிப்பாக இரு..! எல்லா மலைகளுக்கும் நீ ஒரு அருவியாக இரு..! எல்லா அழகான பெண்களுக்கும் நீ ஒரு நல்ல அண்ணனாக மட்டுமே இரு மாமே!ÕÕ
பா।விஜய்ஆனந்த், கொரட்டூர்.

‘‘கோயிலுக்குப் போயிருந்தபோது, யானை குளிச்சதை ஆச்சரியமா பார்த்தே. குளிக்கறது யானைங்கிறதால அப்படிப் பார்க்கறேனு நினைச்சேன். அப்புறம்தான் தெரிஞ்சுது... குளிக்கறதே உனக்கு ஆச்சரியமான விஷயம்தான்னு!ÕÕ
ராகவ்।மகேஷ், தஞ்சாவூர்\9.

‘‘மச்சி! நீ அடிக்கடி உன் போனில் ஒரு பொண்ணு பேசி டார்ச்சர் பண்றானு பீலா விடுறியே! உனக்குத் தெரியாம அது யாருனு செக் பண்ணினேன். நீ ரீசார்ஜ் பண்ணலைனா அப்படிதான் ரெக்கார்டட் மெஸேஜ் வரும்டா கேன!ÕÕ
ஜி।மணிமாறன், தஞ்சை.

‘‘நண்பா! கமல், விக்ரம் நடிப்புக்கெல்லாம் விருது தர்றாங்க... அதெல்லாம் என்னடா நடிப்பு? ஒவ்வொரு கல்யாண மண்டபத்துலேயும் பந்தியிலே இடம் பிடிக்க மாப்பிள்ளை வீட்டுக்காரன் மாதிரியும் பொண்ணு வீட்டுக்காரன் மாதிரியும் நீ நடிக்கிற நடிப்புக்கு ஈடாகுமா?ÕÕ தாமு, தஞ்சாவூர்.

0 comments:

About this Blog

Seguidores

    © படித்ததில் பிடித்தது உங்கள் பார்வைக்கு............ Friends Forever Template by Emporium Digital 2009

Back to TOP