நூறு விதமான ஸ்டைலில் ரஜினி பாட்டு!

>> Sunday, May 24, 2009

நூறு விதமான ஸ்டைலில் ரஜினி பாட்டு!

"சிவாஜி' படத்தில் எம்.ஜி.ஆர்., சிவாஜி, கமல், ஜேம்ஸ் பாண்ட் என
பலரது, "கெட்டப்'பில் தோன்றி நடித்த ரஜினி, "எந்திரன்' படத்தில்
ஒரே பாடலில் 100 விதமான காஸ்ட்டியூம்களில், 100 விதமான ஸ்டைல்
காட்டி நடித்துள்ளார். அதைப் பார்த்து, "உலகிலேயே ஒரே பாடலில்
இத்தனை விதமான ஸ்டைலை ரஜினியைத் தவிர யாராலும் வெளிப்படுத்த
முடியாது...' என்று அப்பாடலுக்கு நடனம் அமைத்த பிரபுதேவா
மிரட்சியுடன் சொல்லி வருகிறார்.


—சினிமா பொன்னையா


* * *


அமீர்கானை அசத்திய அஜீத்குமார்!


"கஜினி'யைத் தொடர்ந்து தமிழில் மீண்டும் ஒரு நல்ல கதை கிடைக்காதா
என்ற தேடலில் இறங்கிய அமீர்கானின் கண்ணில் அஜீத்தின், "வரலாறு'
படம் தென்பட, அதில் அஜீத்தின் நடிப்பை பார்த்து அசந்து போனார்.
உடனே, அஜீத்தை தொடர்பு கொண்டு பாராட்டிய அமீர்கான், அடுத்து,
"வரலாறு' படத்தின் இந்தி ரீ-மேக்கில் நடிக்க தயாராகி வருகிறார்.


* * *


வித்தியாசமானபிரபுதேவா!


சிறிய இடைவேளைக்குப் பிறகு, "களவாடிய பொழுதுகள்' படம் மூலம்
மீண்டும் ஹீரோவாக நடிக்கும் பிரபுதேவா, படத்தின் கதையை ஆகா,
ஓஹோவென்று புகழ்கிறார். குறிப்பாக, "இப்படியொரு கதைக்காகத்தான்
இத்தனை காலம் காத்திருந்தேன். அப்படியொரு காதல், பாசம் கலந்த
உணர்வுகளின் தொகுப்பு இந்தப் படம். இதில் வித்தியாசமான
பிரபுதேவாவை பார்க்கலாம்...' என்கிறார். இதில், நடிப்பதற்காக
தெலுங்கில் சித்தார்த்தை கொண்டு இயக்கும் படத்தின் படப்பிடிப்பை
கூட தள்ளி வைத்துள்ளார்.


* * *


ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் டி.எம்.எஸ்.,!


எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில், "கிருஷ்ண விஜயம்' படத்தில், "ராதே
உனக்கு கோபம் ஆகாதடி...' என்ற பாடல் மூலம் சினிமாவுக்கு
அறிமுகமானவர் பாடகர் டி.எம்.சவுந்தர்ராஜன். தற்போது, அவர்
மீண்டும் அதே எம்.எஸ்.வி., இசையில், "வாலிபன் சுற்றும் உலகம்'
படத்தில் பி.சுசீலாவுடன் இணைந்து பாடியுள்ளார். இந்நிலையில் தான்
இசையமைக்கும் ஆல்பத்தில் பாடவும் டி.எம். சவுந்தர்ராஜனுக்கு
அழைப்பு விடுத்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.


—சி.பொ.,


* * *


த்ரிஷா உஷார் நடவடிக்கை!


கோடிக் கணக்கில் சம்பளம் கேட்டு நயன்தாரா, இலியானா என்று சில
நடிகைகள் படாதிபதிகளின் அதிருப்திக்கு ஆளாகியுள்ளதால், உஷாராகி
விட்டார் த்ரிஷா. "என் நடிப்புக்கு என்ன ஊதியமோ, அதை
தயாரிப்பாளர்கள் நான் கேட்காமலேயே தருவர். சிலர் பணம் தான்
முக்கியம் என்று அலையலாம்; ஆனால், நான் அப்படியல்ல. எனக்கு
கேரக்டர் தான் முக்கியம்; பணமெல்லாம் அதற்கு பிறகு தான்!' என்று
அறிக்கை வெளியிட்டு நல்ல பெயரை சம்பாதித்து வருகிறார் த்ரிஷா.
அவளுக்கு எவள் ஈடு; அவளுக்கு அவளே ஜோடு!


— எலீசா.


* * *


கவர்ச்சிக்கு முழுக்குப் போட்ட மும்தாஜ்!


"ராஜாதி ராஜா' படத்தில், "சைதை சைலஜா' என்ற வில்லி ரோலில்
நடிக்கும் மும்தாஜ், ஒரு கட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சராகி
விடுகிறார். அந்த பாத்திரத்தில், "பஞ்ச்' டயலாக் விட்டபடி
மும்தாஜ் நடித்த நடிப்பைப் பார்த்தவர்கள், "அடுத்து வில்லியாக
பெரிய ரவுண்டு வருவீர்கள்...' என்று அடித்து சொல்கின்றனர்.
அதனால், இனி கவர்ச்சிக்கு முழுக்கு போடப் போவதாக சொல்லும் மும்
தாஜ், முழுநேர வில்லி அவதாரம் எடுக்க தீர்மானித்துள்ளார்.


* * *


கலக்க வருகிறார் சரோஜா தேவி!


ஜக்குபாயைத் தொடர்ந்து, "ஆதவன்' படத்தை இயக்கும் கே.எஸ்.
ரவிக்குமார், மாஜி கதாநாயகி சரோஜாதேவிக்கு முக்கியத்துவம்
கொடுத்துள்ளார். அவரை மேலும் பெருமைப்படுத்தும் வகையில்
எம்.ஜி.ஆர்., சரோஜாதேவியின் சூப்பர்ஹிட் டூயட் பாடல் ஒன்றையும்
மலரும் நினைவுகளாக படத்தில் இணைக்கவும் திட்டமிட்டுள்ளார்.
இதனால், படப்பிடிப்புக்கு தன்னை எப்போது அழைப்பர் என்று ஏக
குஷியில் உள்ளார் கன்னடத்துப் பைங்கிளி சரோஜா தேவி. ஆடிய காலும்,
பாடிய வாயும் சும்மா இருக்காது.


* * *


பப்ளிசிட்டி தேடும் ப்ரியாமணி!


இந்தி, "ராவணா'வில் சூர்ப்பனகை வேடத்தில் நடிக்கும் ப்ரியாமணி,
படம் ரிலீசானதும் இந்தி சினிமாவுக்குள் நுழைய அதிரடி திட்டம்
தீட்டி வருகிறார். "ராவணா' வில் தன் பங்கு சிறியதே என்றபோதும்,
"தென்னக சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகைகளுள் நானும் ஒருவள்!'
என்பதை அங்குள்ள பிரபலங்களுக்கு உணர்த்தும் வகையில் தன் படப்
பட்டியலையும், தான் தேசிய விருது பெற்ற நடிகை என்பதையும்,
வெளிப்படுத்தி வருகிறார். காரண குருவே காரிய குரு.

0 comments:

About this Blog

Seguidores

    © படித்ததில் பிடித்தது உங்கள் பார்வைக்கு............ Friends Forever Template by Emporium Digital 2009

Back to TOP