எங்கேயோ கேட்ட கடி

>> Tuesday, October 21, 2008

--------------------------------------------------------------------------------

காகம் ஏன் தண்ணீரில் மூழ்குவதில்லை

அது கரையுமே



--------------------------------------------------------------------------------

டைப்ரைட்டிங் மெஷின் பெண்பால்டா

எப்படிடா

ரிப்பன் கட்டியிருக்கு பாரு



--------------------------------------------------------------------------------

தயிர் ஏன் வெள்ளையாக இருக்கிறது

தோய்க்கிறதாலே



--------------------------------------------------------------------------------

காதலர்கள் ஏன் எப்பவும் பொய்யே பேசுகிறார்கள்

அவர்கள் 'மெய் 'மறந்து காதலிப்பதால்



--------------------------------------------------------------------------------

போட்டாகிராபி தொழில் செய்ய முக்கியமானது எது ? திறமையா அதிர்ஷ்டமா ?

இரண்டும் இல்லை, கேமரா.



--------------------------------------------------------------------------------

ரயில் வரும்போது ஏன் கேட்டை மூடிடறாங்க தெரியுமா ?

ம்....

ஆ.. இதுகூட தெரியாம இருக்க பாரு.. ரயில் ஊருக்குள்ளாற போயிரக்கூடாதுன்னுதான்



--------------------------------------------------------------------------------

நீயும் ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு குண்டூசி தொழிற்சாலை துவங்கறதா இருந்தீங்களே என்னாச்சி

அவங்க பின் வாங்கிட்டாங்க



--------------------------------------------------------------------------------

தெருவில போற எல்லோரும் அந்த ஆள்கிட்ட டைம் கேட்டுட்டு போறாங்களே ஏன் ?

அவர் வாட்ச்மேனாம்



--------------------------------------------------------------------------------

எல்லாப் பணத்திலயும் ஏன் காந்தி சிரித்துக்கொண்டே இருக்கிறார் ?

அழுதா பணம் நனைஞ்சி போயிடுமே



--------------------------------------------------------------------------------

இந்த கடிகாரம் சரியான நேரத்தைக் காட்டுமா ?

அது காட்டாது, நாம் தான் பார்க்கவேண்டும்.



--------------------------------------------------------------------------------

தொலைபேசியில்: டாக்டர்! என் கணவர் ஒரு பேனாவை விழுங்கிவிட்டார்.

இன்னும் சில நிமிஷங்களில் வந்துவிடுகிறேன்

அதுவரை நான் என்ன செய்வது ?

பென்ஸிலை உபயோகியுங்கள்.



--------------------------------------------------------------------------------

அரசியல்வாதிகளுக்குப் பிடிக்காத பிஸ்கட்

ட்ரூ பிஸ்கட்



--------------------------------------------------------------------------------

நாய் வியாபாரம் பண்ணீங்களே இப்ப எப்படியிருக்கு வியாபாரம்

கையை கடிச்சிருச்சி



--------------------------------------------------------------------------------

படிச்சவனா இருக்க, நீயே ரூபா நோட்டு அடிக்கலாமா ?

நான் சுயநிதிக் கல்லூரியில் படிச்சவன்சார்



--------------------------------------------------------------------------------

நீண்டநாள் உயிரோடுவாழ வழி என்ன ?

வேறென்ன சாகாமல் இருப்பதுதான்



--------------------------------------------------------------------------------

நாலுநாளா எனக்குத் தாங்கமுடியாத இருமல்..

பெஸ்ட் ஆஃப் லொக்



--------------------------------------------------------------------------------

எலெக்ட்ரிக் ஒயர்ல மூணு எறும்பு போச்சி. ரெண்டு எறும்பு ஷாக் அடிச்சி செத்துப் போச்சி. ஒண்ணு மட்டும் சாகலை. ஏன்

அது கட்டை எறும்பு



--------------------------------------------------------------------------------

மேட்டூர் நீர் மேல பத்திரிக்கைக்காரங்களுக்கு கோபமா என்ன ?

ஏன் ?

மேட்டூர் நீர் மட்டம்னு போடறாங்க தினமும்.



--------------------------------------------------------------------------------



--------------------------------------------------------------------------------

0 comments:

About this Blog

Seguidores

    © படித்ததில் பிடித்தது உங்கள் பார்வைக்கு............ Friends Forever Template by Emporium Digital 2009

Back to TOP