எங்கேயோ கேட்ட கடி
>> Tuesday, October 21, 2008
--------------------------------------------------------------------------------
காகம் ஏன் தண்ணீரில் மூழ்குவதில்லை
அது கரையுமே
--------------------------------------------------------------------------------
டைப்ரைட்டிங் மெஷின் பெண்பால்டா
எப்படிடா
ரிப்பன் கட்டியிருக்கு பாரு
--------------------------------------------------------------------------------
தயிர் ஏன் வெள்ளையாக இருக்கிறது
தோய்க்கிறதாலே
--------------------------------------------------------------------------------
காதலர்கள் ஏன் எப்பவும் பொய்யே பேசுகிறார்கள்
அவர்கள் 'மெய் 'மறந்து காதலிப்பதால்
--------------------------------------------------------------------------------
போட்டாகிராபி தொழில் செய்ய முக்கியமானது எது ? திறமையா அதிர்ஷ்டமா ?
இரண்டும் இல்லை, கேமரா.
--------------------------------------------------------------------------------
ரயில் வரும்போது ஏன் கேட்டை மூடிடறாங்க தெரியுமா ?
ம்....
ஆ.. இதுகூட தெரியாம இருக்க பாரு.. ரயில் ஊருக்குள்ளாற போயிரக்கூடாதுன்னுதான்
--------------------------------------------------------------------------------
நீயும் ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு குண்டூசி தொழிற்சாலை துவங்கறதா இருந்தீங்களே என்னாச்சி
அவங்க பின் வாங்கிட்டாங்க
--------------------------------------------------------------------------------
தெருவில போற எல்லோரும் அந்த ஆள்கிட்ட டைம் கேட்டுட்டு போறாங்களே ஏன் ?
அவர் வாட்ச்மேனாம்
--------------------------------------------------------------------------------
எல்லாப் பணத்திலயும் ஏன் காந்தி சிரித்துக்கொண்டே இருக்கிறார் ?
அழுதா பணம் நனைஞ்சி போயிடுமே
--------------------------------------------------------------------------------
இந்த கடிகாரம் சரியான நேரத்தைக் காட்டுமா ?
அது காட்டாது, நாம் தான் பார்க்கவேண்டும்.
--------------------------------------------------------------------------------
தொலைபேசியில்: டாக்டர்! என் கணவர் ஒரு பேனாவை விழுங்கிவிட்டார்.
இன்னும் சில நிமிஷங்களில் வந்துவிடுகிறேன்
அதுவரை நான் என்ன செய்வது ?
பென்ஸிலை உபயோகியுங்கள்.
--------------------------------------------------------------------------------
அரசியல்வாதிகளுக்குப் பிடிக்காத பிஸ்கட்
ட்ரூ பிஸ்கட்
--------------------------------------------------------------------------------
நாய் வியாபாரம் பண்ணீங்களே இப்ப எப்படியிருக்கு வியாபாரம்
கையை கடிச்சிருச்சி
--------------------------------------------------------------------------------
படிச்சவனா இருக்க, நீயே ரூபா நோட்டு அடிக்கலாமா ?
நான் சுயநிதிக் கல்லூரியில் படிச்சவன்சார்
--------------------------------------------------------------------------------
நீண்டநாள் உயிரோடுவாழ வழி என்ன ?
வேறென்ன சாகாமல் இருப்பதுதான்
--------------------------------------------------------------------------------
நாலுநாளா எனக்குத் தாங்கமுடியாத இருமல்..
பெஸ்ட் ஆஃப் லொக்
--------------------------------------------------------------------------------
எலெக்ட்ரிக் ஒயர்ல மூணு எறும்பு போச்சி. ரெண்டு எறும்பு ஷாக் அடிச்சி செத்துப் போச்சி. ஒண்ணு மட்டும் சாகலை. ஏன்
அது கட்டை எறும்பு
--------------------------------------------------------------------------------
மேட்டூர் நீர் மேல பத்திரிக்கைக்காரங்களுக்கு கோபமா என்ன ?
ஏன் ?
மேட்டூர் நீர் மட்டம்னு போடறாங்க தினமும்.
--------------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------------
0 comments:
Post a Comment